சிதம்பரத்தில் உள்ள 5 சபைகள்
சிற்றம்பலத்தைச் சுற்றியுள்ள முதல் பிரகாரத்தில் கூத்தாடும் விநாயகர், லிங்கோத்பவர், ஆறுமுகப் பெருமான் சந்நிதிகளை
அடுத்து மேல் மாளிகையையும் ஆகாய லிங்கத்தையையும், கிழக்கில் பிச்சாண்டேஸ்வரர், பைரவர் சந்நிதிகளையும்
வணங்கலாம். இவற்றிற்கு எதிரில் பரமானந்த கூவம் என்னும் தீர்த்தக் கிணற்றையும், பிரம்மாவும், சண்டிகேஸ்வரர்ரும் சேர்ந்து அமர்ந்துள்ள கருவறையையும் தரிசிக்கலாம். இக்கோவிலில்
இறைவன் ஆடல் புரியும் சிற்சபை, அதன் முன்னுள்ள கனக சபை, ஊர்த்துவ தாண்டவர் சந்நிதி ஆகிய
நிறுத்த சபை, உற்சவர்கள் எழுந்தருளி உள்ள தேவசபை, ஆயிரங்கால் மண்டபமாகிய இராச சபை என 5 சபைகள் உள்ளன.

Comments
Post a Comment