Posts

Showing posts from July, 2017

சிதம்பரத்தில் நடைப்பெற்ற அற்புதங்கள்

Image
  1. மாணிக்கவாசக சுவாமிகள் ஒரு ஊமைப் பெண்னை பேச வைத்தது.                      2. மாணிக்கவாசகர் , திருவாசகத்தின் பொருள் கூத்தப் பெருமானே எனக் கூறி இறைவனுடன் இரண்டறக் கலந்தது.                      3. திருநாளைப் போவார் தீயில் மூழ்கி ஓர் அந்தன வடிவுக் கொண்டு எழுந்து இறைவனைத் தரிசித்தது.                       4. திருநீலகண்டநாயனார் தமது மனைவியுடன் , திருக்குளத்தில் மூழ்கி இளமை வரப் பெற்று இறைவனின் திருக்காட்சி கண்டு வணங்கி , நெடு நாள் வாழ்ந்தது.                        5. பெத்தான் சாம்பான் என்னும் விறகு வெட்டிக்கு உமாபதிசிவம் தீட்சை அளித்து , பெத்தான் சாம்பானும் ,...

தில்லை கோவிந்தராசப் பெருமாள்

Image
நடராஜப் பெருமானின் சந்நிதி எதிரில் தென்புறம் உள்ள படிகளின் மேலேறி நின்று பார்த்தால் தெற்கு நோக்கி நடனமாடும் நடராஜரையும் , தென்வடலாக பள்ளி கொண்ட பெருமாளையும் , ஒரே நேரத்தில் நாம் தரிசனம் செய்யலாம்.   இவ்வித அமைப்பு   வேறு எங்குமே காண முடியாது. கி.பி. 8 ம் நூற்றாண்டில் நந்திவர்ம பல்லவனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவிந்தராசப் பெருமானின் சந்நிதி தில்லை திருச்சித்திரக் கூடம் எனப்படும். திருமங்கை யாழ்வாராலும் , குலசேகராழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து உறைவது இத்தலத்தின் பெருஞ்சிறப்பாகும். சைவ வைணவ ஒற்றுமைத்தலமாக சிதம்பரம் விளங்குகிறது.   அய்யப்ப தீட்சிதர் என்பவர் , இருவரையும் ஒருங்கே போற்றும் முறையில் வட மொழியில் தோத்திரப் பாடல்கள் பாடியுள்ளார்.

சிதம்பரத்தில் உள்ள 5 சபைகள்

Image
சிற்றம்பலத்தைச் சுற்றியுள்ள முதல் பிரகாரத்தில் கூத்தாடும் விநாயகர் ,   லிங்கோத்பவர் ,   ஆறுமுகப் பெருமான் சந்நிதிகளை அடுத்து மேல் மாளிகையையும் ஆகாய லிங்கத்தையையும் , கிழக்கில் பிச்சாண்டேஸ்வரர் ,   பைரவர் சந்நிதிகளையும் வணங்கலாம். இவற்றிற்கு எதிரில் பரமானந்த கூவம் என்னும் தீர்த்தக் கிணற்றையும் ,   பிரம்மாவும் , சண்டிகேஸ்வரர்ரும் சேர்ந்து அமர்ந்துள்ள கருவறையையும்   தரிசிக்கலாம். இக்கோவிலில் இறைவன் ஆடல் புரியும் சிற்சபை ,   அதன் முன்னுள்ள கனக சபை , ஊர்த்துவ தாண்டவர் சந்நிதி ஆகிய நிறுத்த சபை , உற்சவர்கள் எழுந்தருளி உள்ள தேவசபை , ஆயிரங்கால் மண்டபமாகிய இராச சபை என 5 சபைகள் உள்ளன.

நடராஜப் பெருமான்

Image
சிதம்பரத்தில் அருவத் திருமேனியாக சிதம்பர ரகசியத்தையும் , உருவத் திருமேனியாக கூத்தப்பெருமானையும் , அருவுருவத் திருமேனியாக ஸ்படிக லிங்கத்தையும் ஒருங்கே கண்டு தரிசிக்கலாம்.                                                   இறைவன் உயிர்களுக்கு முக்தியருள ஐந்தெழுத்தையே தம்மேனியாகவும் ,   ஐந்து தொழில்களை இயற்றும் ஆனந்தக் கூத்தினையே ஆடி அருளுகின்றார். இவ் ஐந்து தொழில்களுக்கு உட்பட்டு உலக உயிர்கள் இயங்குகின்றன.

சிதம்பர ரகசியம்

Image
                      எல்லாம் வல்ல இறைவன் முக்கண்களும், நான்கு திருக் கரங்களும் ,  இளம்பிறை , பாம்பு ,  ஊமத்த நறுமலர் ,  கங்கை தங்கிய சடை மகுடம் உடையவராகவும் , புளித்தோலாடை அணிந்து நீறணிந்த மேனியும், குமிண்சிரிப்பு உடையவராகவும் ,  இடப்பக்கத்தே உள்ள சிவகாமி அம்மையார் கண்டுகளிக்க ஆனந்தத் திருக்கூத்தினை ஆடியருளுகிறார். இவருக்கு அருகில் இரத்தின சபாபதி திருவுருவம் உள்ள பேழையும் ,  ஸ்படிகலிங்கம் உள்ள பேழையும் வைக்கப்பட்டுள்ளன. நடராஜப் பெருமானுக்கு வலப்பக்கத்தில் , ஒரு பொன்னாலான வில்வ இதழ் மாலை ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது. இது கறுப்புத் திரை ஒன்றினால் மறைக்கப்பட்டுள்ளது. திரையை நீக்கி கற்பூரம் காட்டும் போது நாம் பலகணி வழியாக இந்த மாலையைத் தரிசிப்பது , இறைவன் அருவமாக வான் வெளியில் இருக்கிறார் என்பதைக் குறிக்கும். இதுவே சிதம்பர ரகசியம் ஆகும்.