நடராஜப் பெருமான்
சிதம்பரத்தில் அருவத் திருமேனியாக சிதம்பர ரகசியத்தையும், உருவத் திருமேனியாக
கூத்தப்பெருமானையும், அருவுருவத் திருமேனியாக ஸ்படிக லிங்கத்தையும் ஒருங்கே கண்டு
தரிசிக்கலாம்.
இறைவன் உயிர்களுக்கு
முக்தியருள ஐந்தெழுத்தையே தம்மேனியாகவும், ஐந்து தொழில்களை இயற்றும்
ஆனந்தக் கூத்தினையே ஆடி அருளுகின்றார். இவ் ஐந்து தொழில்களுக்கு உட்பட்டு உலக
உயிர்கள் இயங்குகின்றன.

Comments
Post a Comment