சிற்றம்பலத்தைச் சுற்றியுள்ள முதல் பிரகாரத்தில் கூத்தாடும் விநாயகர் , லிங்கோத்பவர் , ஆறுமுகப் பெருமான் சந்நிதிகளை அடுத்து மேல் மாளிகையையும் ஆகாய லிங்கத்தையையும் , கிழக்கில் பிச்சாண்டேஸ்வரர் , பைரவர் சந்நிதிகளையும் வணங்கலாம். இவற்றிற்கு எதிரில் பரமானந்த கூவம் என்னும் தீர்த்தக் கிணற்றையும் , பிரம்மாவும் , சண்டிகேஸ்வரர்ரும் சேர்ந்து அமர்ந்துள்ள கருவறையையும் தரிசிக்கலாம். இக்கோவிலில் இறைவன் ஆடல் புரியும் சிற்சபை , அதன் முன்னுள்ள கனக சபை , ஊர்த்துவ தாண்டவர் சந்நிதி ஆகிய நிறுத்த சபை , உற்சவர்கள் எழுந்தருளி உள்ள தேவசபை , ஆயிரங்கால் மண்டபமாகிய இராச சபை என 5 சபைகள் உள்ளன.
Comments
Post a Comment